பேருந்து கட்டணம்..

பேருந்து கட்டணங்கள் மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்து கட்டணமாக 27 ரூபா அறவிடப்படவுள்ளது. எரிபொருள் விலை உயர்வே பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




