அகதிகளாக..
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாகச் சென்றடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை தனுஷ்கோடியைச் சென்றடைந்த குறித்த இலங்கைத் தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மட்டக்களப்பிலிருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்குச் சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.