யாழில்..
யாழ். தெல்லிப்பழையில் ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்ற சம்பவமானது இடம்பெற்றுள்ளது.
எரிபொருட்களின் விலைகள் நாட்டில் உச்சம் தொட்டுள்ள நிலையில், விலையேற்றத்தைப் பிரதிபலிக்கும் முகமாக குறித்த ஆசிரியர்கள் இன்று காலை இவ்வாறு மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்களே இவ்வாறு மல்லாகம் சந்தியிலிருந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை மாட்டு வண்டியில் பாடசாலைக்குச் சென்றுள்ளனர்.