முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் மரத்துடன் மோதிய கார்!!

1404

முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில்..

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல விபத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. முல்லைத்தீவு – நெடுங்கேணி வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் நேற்று (21.04) இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையில் இருந்து நெடுங்கேணி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுகார், 7ஆம் கட்டைப்பகுதியில்,

வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை வீதிப்போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.