லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2666

லிட்ரோ எரிவாயு நிறுவனம்..

எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளில் உள்ளமையினால் நகர பகுதிகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினை எதிர்வரும் மே மாத இறுதியில் முடிவுக்கு வந்து விடும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.