வவுனியாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்!!

1932


பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்..



பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதையடுத்து வவுனியாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டது.



பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை தாக்கியிருந்தனர்.




இதனையடுத்து பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களம் உக்கிரமடைந்திருந்தது.


இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில் வவுனியா இலுப்பையடி சந்தியில் இன்று (09.05) மாலை 6.00 மணியளவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கருணாதாச ஏற்பாட்டில் பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.