ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள்!!

1139

ஆயிஷா..

களுத்துறை அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது. ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் ஜனாஸா நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து அட்டுலுகம கிராமம் மட்டுமன்றி பல இடங்களில் இருந்து வருகை தந்த மக்களின் கண்ணீருடன் சிறுமி ஆயிஷாவின் இறுதிப் பயணம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.