கொழும்பில் இருந்து இருவர் உட்பட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!!

719

கொழும்பைச் சேர்ந்த தாய், மகன் உள்ளிட்ட மூவர் படகு மூலம் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி, அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குறித்த மூவரும் மன்னார் – பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றிரவு படகொன்றில் சென்று இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள கோதண்டராமர் கடற்கரைப் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்டபம் கடலோரக் காவல் படையினர் மூவரையும் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையில் 83 பேர் கடல் மார்க்கமாகத் தமிழகம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.