வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் : லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

872

சமையல் எரிவாயு..

நாளைய தினம் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே எரிவாயுக்கொள்வனவு செய்வதற்காக, எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 3,900 மெற்றிக் டன் எரிவாயுடன் நேற்று நாட்டை வந்தடைந்த கப்பலுக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் பணம் செலுத்தப்படாமையால், இதுவரையில் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.