இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்த இளைஞன்!!

2302


திருகோணமலை..



திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞன் முன்று நாளைக்கு பின் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளார்.



ஈச்சநகர் காட்டில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞனை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொது மக்கள் சேர்ந்து இன்று மீட்டுள்ளனர்.




முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்து சாப்பிடுவதற்காக போனவர்களை தேடி தனியாக சென்ற இளைஞன் கரடி துரத்தியதால் தான் வழிதவறி காட்டிற்கு சென்றதாகவும் இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் இளைஞர் தெரிவித்துள்ளார்.


வியாழக்கிழமை (16) காணாமல் போயிருந்த நிலையில் பொது மக்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பின் இன்று மீட்கப்பட்டு கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.