12 வயது பாடசாலை மாணவன் மாயம்!!

1528

மகேந்திரன் ஆசான்..

நுவரெலியா மாவட்டத்தில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார். நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் தோட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆசான் என்ற,

12 வயது பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் ஊடகங்களுக்கு நானுஓயா பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று(17) காலையில் இருந்து மாணவன் காணாமல்போயுள்ளார் என்று அவரின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.