கணவரை விவாகரத்து செய்தாரா விஜே பிரியங்கா? கண்ணில் காட்டாமல் ஒளித்து வைக்க காரணம் என்ன!!

1444

விஜே பிரியங்கா

டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா. அப்படி விஜே பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம்.

தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றும் இருந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியின் சிறந்த தொகுப்பாளினி விருதினை கைப்பற்றியதுடன் போட்டோஷூட் பக்கம் முழுவதுமாக திரும்பியுள்ளார்.

இதுவரை பார்க்காத அளவிற்கு பிரியங்காவின் விவாகரத்து வதந்தியா பிரியங்கா கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே தொலைக்காட்சியில் டெக்டினியனாக பணியாற்றி வந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொணடனர்.

திருமணத்திற்கு பின் ஒருசில இடங்களில் மட்டும் அடையாளப்படுத்தினார் பிரியங்கா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்தவொரு அறிவிப்பு கணவர் பிரிவீன் பற்றிய கருத்துக்கள் இடம் பெறாமல் இருந்து வந்தது, இதற்கு காரணம் முற்றிலுமாக பிரியங்கா கணவரை பிரிந்து விட்டார் என்பது தான்.

அம்மாவுடன் வசித்து வரும் பிரியங்கா தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக மறைத்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் தன் கணவரை பற்றி எங்கும் பயன்படுத்தி பேசவில்லை. அதேபோல் நிகழ்ச்சி முடிந்தும் கூட கணவரை சந்திக்காமல் இருந்து வருகிறார்.

தன் உலகமே என்னுடைய அம்மா, தம்பி தான் என்று சமீபத்தில் ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளார். இதற்கு இணையத்தில் சிலர் கணவர் பற்றிய கேள்விகளை கேட்டு வருகிறார்கள். உண்மையில் உங்களுக்கும் பிரவீன் குமாருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டு வருகிறார்கள்.