பேருந்து -எரிபொருள் பவுசர் மோதி விபத்து : 29 பேர் பரிதாபமாக பலி!!

577

விபத்து..

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் மோதிக்கொண்டதால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். முல்தான்- சுக்குர் நெடுஞ்சாலையில் இன்று (16.08) அதிகாலை 4.00 மணியளவில்,

இச்சம்பவம் இடம்பெற்றதாக முல்தான் ஆணையாளர் அமீர் கத்தாக் தெரிவித்துள்ளார். லூகூரிலிருந்து கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து,

எரிபொருள் பவுசரின் பின்புறத்தில் மோதி தீப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் 29 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர் எனவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.