ஆட்டை வெட்டுவதாக நினைத்து தன் பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட நபர் : அதிர்ச்சி சம்பவம்!!

665

ஆபிரிக்காவில்..

ஆட்டை வெட்டுவதாக நினைத்து தனது ஆணுறுப்பையே நபர் ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டில், மத்திய மாகாணமாக உள்ள மத்திய கூடிய அஸ்ஸின் ஃபோசு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கொஃபி அட்டா(47) என்ற விவசாயி தான் அவர்.

இவர் தான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து, தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இச்சம்பவம் ஆனது ஆகஸ்ட் 12ம் தேதி அன்று நடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி அட்வோ கொனாடு பேசுகையில், “நான் வெளியே சென்ற நேரத்தில் தான் இது நிகழ்ந்துள்ளது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் என்னிடம் கூறினார்கள்.

உடனடியாக பதறிய வந்து பார்த்ததும் என கணவரின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடித்து கொண்டிருக்கிறது. உடனே டையப்பரை அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்” என தெரிவித்துள்ளார்.

பிபிசியின் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்ட நபர் மேல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், இதுபற்றி பேசிய கொஃபி, “சேரில் உட்கார்ந்து உறங்கி கொண்டிருந்தேன், அப்போது சமைப்பதற்காக ஆட்டை வெட்டுவது போல் கனவு வந்தது.

உறங்கும் போது எப்படி என் கையில் வந்தது என தெரியவில்லை. அது தான் குழப்பமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தெரிவிக்கையில், அவரின் பிறப்புறுப்பு மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து 6 வாரங்களுக்கு பிறகு அவர் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவித்து உள்ளனர்.