54 வயது நபரை மணந்த 22 வயது பெண் : குழந்தை பெற்ற 2 நாட்களுக்கு பின் நடந்த திருமணம்!!

740

இங்கிலாந்தில்..

22 வயதான இளம்பெண் ஒருவர், 54 வயது ஆண் ஒருவரை காதலித்த நிலையில், தங்கள் காதல் காரணமாக சந்தித்த பிரச்சனைகளை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தின் Maidstone என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Vanessa.

22 வயதாகும் இவர், டேபிள் டென்னிஸ் போட்டியின் போது, அந்த விளையாட்டின் பயிற்சியாளரான Geza Szabo (வயது 54) என்வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முதன் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், Vanessa மற்றும் Geza ஆகியோர் நண்பர்களாக தான் பழகி வந்துள்ளனர். இதன் பின்னர், நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் என்பதைத் தாண்டி, ஆரம்பத்தில் அவர்கள் டேட்டிங் செய்தும் வந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு இடையே காதலும் மலர்ந்துள்ளது.

Vanessa மற்றும் Geza ஆகியோருக்கு இடையேயான காதல் என்பது சற்று தீவிரம் அடைந்த நிலையில், அவர்கள் இணைந்து வாழவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி பேசும் Vanessa, “ஆரம்பத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எந்த விருப்பமும் எங்களுக்குள் உருவாகவில்லை.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி பேசிக் கொண்டே வந்த பின்னர் தான், ஒருவரை பற்றி ஒருவர் நன்கு தெரிந்து கொண்டோம். 32 வயது வித்தியாசமுள்ள ஒரு நபரிடம் நான் இதுவரை ஈர்க்கப்பட்டதே கிடையாது. மேலும், அவரும் என் வயது பெண்ணுடன் இதற்கு முன் டேட்டிங் செய்ததில்லை.

அவர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்ட ஒரு மனிதர். அதனால், என்னை எப்போதுமே சிரிக்க வைப்பார். எங்கள் காதல் பற்றி, எனது பெற்றோரிடம் சொன்ன போது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

எங்களை பிரிக்க வேண்டும் என்று தான் அவர்கள் முயன்றனர். என் வயது நபர்களுடன் தான் நான் பழக வேண்டும் என்றும் அவர்கள் என்னை அறிவுறுத்தினர். நாட்கள் சென்றால் நான் சிறந்த உறவை தேடி சென்று விடுவேன் என்றும் கூறினர்.

ஆனால் ஒரு கட்டத்தில், எங்கள் காதலின் தீவிரம் அறிந்து அவர்கள் எங்களை ஏற்றுக் கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு, எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர், அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

என்னையும், Geza-வையும் ஒன்றாக பார்க்கும் பலரின் முகத்தில் நிறைய மாற்றங்கள் வரும். பலரும் எங்களை அப்பா – மகள் என்றே நினைக்கின்றனர். ஒருவரை நீங்கள் மதிப்பிடுவதற்கு முன்பாக, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என Vanessa கூறி உள்ளார்.

2009ம் ஆண்டிலிருந்து எமது பிள்ளைகளை தேடுகின்றோம் நீதி கிடைக்குமா? கண்ணீர் மல்கும் பெற்றோர்