வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த சகோதரிகள் : வணிகத்துறையில் முதலிடம்!!

1987

புதுக்குளம் மகா வித்தியாலயத்தில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சகோதரிகள் சிறந்த பெறுபேற்றினை பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

அதன் அடிப்டையில் வணிகத்துறையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் லுவின்சிகா மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினையும் வணிகத்துறையில் 2ஏ 1பி சித்திகளை பெற்று லிவிங்சிகா மாவட்ட ரீதியில் 12வது இடத்தினை சகோதரிகள் பெற்றுள்ளனர்.

அத்துடன் கலைத்துறையில் 3 ஏ சித்திகளை பெற்று கிருசாந்தினி மாவட்ட ரீதியில் 20வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் வணிகத்துறையில் நிதுசன் ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 26வது இடத்தினையும்  ரொசானி மேரி ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 27 வது இடத்தினையும்,

கலைத்துறையில் ஜெஸ்விகா 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 29வது இடத்தினையும் , கஜாந்தினி ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 55வது இடத்தினையும் , சிந்துஜன் ஏ2பி சித்திளை பெற்று மாவட்ட ரீதியில் 75வது இடத்தினையும்,

யசோதரன் ஏ 2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 102வது இடத்தினையும் , சுவாத்திகா ஏ பி சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 111 வது இடத்தினை பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற்வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.