நந்தகுமார் விதுர்ஷன்..
வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலய மாணவன் நந்தகுமார் விதுர்ஷன் வரலாற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கரப்பைமடு எனும் கிராமத்தில் வசித்து வரும் நந்தகுமார் விதுர்ஷன் கிராமத்திலிருந்து நகரிலுள்ள செட்டிக்குளம் பாடசாலைக்கு சென்று கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 21வது இடத்தினை பெற்றுள்ளதுடன் அவரது கிராமத்திற்கும் பெறுமையினை தேடித்தந்துள்ளார்.
செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரப்பரீட்சையில் மூன்று பாடங்களிலும் 3A சித்திகளை பெற்ற முதல் மாணவர் இவரே ஆவார். இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.