வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 3 மாணவர்கள் 3A சித்திகளுடன் சாதனை!!

2715

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில்..

வெளியான உயர் தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் பௌதிக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்ற மாணவன் ராஜ்குமார் சுலோஜன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 75வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

மேலும் உயிரியல் பிரிவில் நிகருண்யா திருமூர்த்தி ஏ2பி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 22வது இடத்தினையும் அத்துடன் வர்த்தக பிரிவில் யசிந்தா யேசுதாசன் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 15வது இடத்தினையும் வத்ஷனா ராஜரட்ணம் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 18வது இடத்தினையும் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் திறமைச் சித்திகளை பெற்றுள்ளனர்.

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.