பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரவிருக்கும் அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை கீழகுயில்குடியை சேர்ந்த ரகுபதி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் “அன்னக்கொடியும் கொடி வீரனும்”. அந்த படத்திற்கான பூஜை கடந்த ஓராண்டுக்கு முன் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் போடப்பட்டது. பட பூஜையில் பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாலச்சந்தர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து வரும் 28 ஆம் திகதி திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தில் வெவ்வேறு இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதுபோல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தென் மாவட்டங்களில் சாதி மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி ரகுபதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் படத்திற்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.