வவுனியா பூந்தோட்டத்தில் பொலிசாரின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை!!

482

நடமாடும் சேவை..

பொலிஸ் தினத்தை முன்னிட்டு, வவுனியா – பூந்தோட்டத்தில் நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது. வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில், வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று (10.09.2022) நடமாடும் சேவை இடம்பெற்றது.

156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு, மக்கள் இலகுவாக சேவைகளை பெற்றுக் கொள்ளும் முகமாக குறித்த நடமாடும் சேவை இடம்பெற்றிருந்தது. மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களிற்கான சேவைகளினை பெற்றுக்கொண்டனர்.

சிறு குற்றப்பிரிவு முறைப்பாடுகள், தொலைந்த ஆவணங்கள் பற்றிய முறைப்பாடுகள், அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், இணக்க சபை செயற்பாடுகள்,

கிராம அலுவலரின் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்ள கூடிய வகையில் குறித்த நடமாடும் சேவை ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, மத்தியஸ்தசபையின் உபதலைவர் அமிர்தலிங்கம் மற்றும் ஆட்பதிவு திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.