வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்த உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம்!!

792

உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம்..

13 முதல் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் உறவுகளுடன் உறவாடும் உணர்வுமிகு கண்ணீர்ப் பயணம் இன்று (10.09.2022) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது.

சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைத்திருக்கும் தமது உறவுகளை பார்வையிடுவதற்கு குரலற்றவர்களின் குரல் அமைப்பினரின் ஏற்பாட்டில் அவர்களின் உறவினர்களை யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்பு நோக்கி இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தில் அழைத்துச் செல்கின்றனர்.

அந்த வகையில் யாழ் மாவட்டத்திலிருந்து இன்று மதியம் ஆரம்பமான பயணம் மாலை 6 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்து அரசியல் கைதிகளில் விடுதலையினை வேண்டி ஆலய வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களுக்கு தமிழ்விருட்சம் அமைப்பினர் மற்றும் கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் இணைந்து அவர்களுக்கான உணவுகளையும் வழங்கியிருந்தனர்.