இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 60 சவரன் நகைகளை திருடிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

451

மதுரையில்..

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
சமூக வலைதங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமை பள்ளி சிறுவர், சிறுமிகள் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

படிப்பு நேரம் போக கையில் செல்போனுடன் இன்ஸ்ட்டாகிராம் சென்று ரீல்ஸ் போடுவதையும், ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து லைக்ஸ்காக பதிவேற்றுவதையம் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ரோமியாக்கள் பலர் வயது வித்தியாசம் பார்க்காமல் சிறுமிகளிடமும் ஆசை வார்த்தைக்கூறி காதலில் வீழ்த்திவிடுக்கின்றனர்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞருக்கு, வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகளை திருடிக்கொடுத்த 16 வயது சிறுமியின் செயலால் பெற்றோர் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- மீனாட்சி தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவருடன் பழகி வந்துள்ளார்‌.

இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மாயமான நகைகள் சுமார் 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகைகள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகை மிரட்டி வாங்கியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.