20 வயது மகளுடன் சேர்ந்து தாய் செய்துவந்த மோசமான செயல்!!

748

மதுரையில்..

மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரத் தொழில் செய்து வந்த காவலர் உட்பட மூன்று பேரை கைது செய்த போலீசார் இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

மதுரை நகரில் உள்ள கோ.புதூர் டிஆர்ஓ காலனி முனியாண்டி கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து சிலர் விபச்சாரத் தொழில் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தவலின் அடிப்படையில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பெண் உட்பட 3 பேரை சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்மணி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது. அந்த பெண் மீது ஏற்கனவே விபச்சார வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

 

இந்த பெண்மணி வறுமையில் உள்ள ஏழை பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும், சுமதிக்கு உடந்தையாக இருந்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தேவேந்திரன்(வயது 49).

செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காசி(வயது 42) ஆகியோர் கூட்டாக சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மூவரையும் கைது செய்த போலீசார் அந்த வீட்டில் இருந்த 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து மதுரை நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, விபச்சார தொழிலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு இளம் பெண்களில் ஒருவர், தொழில் செய்து வந்த பெண்ணின் 20 வயது சொந்த மகள் என்ற தகவல் போலீசார் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.