வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

1767

புளியங்குளம் பகுதியில்..

வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் (13.09.2022) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ். நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பஞ்சநாதன் குகேந்திரன் (வயது 49) என்ற நபரே மரணமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.