மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த கணவன்!!

759

ஒடிசாவில்..

ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்த பஹிர்( 32) என்பவர் திருமணமாகி 2 வயது குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமானார்.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. பஹிர் தனது காதலை ரகசியமாகவே வைத்திருந்தார். ஆனால் அவரது காதலை அவரின மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து தனது கணவருடன் மனைவி பேசினார். அவர்களின் காதலை பஹரின் மனைவி அங்கீகரித்தார்.

அதோடு நிற்காமல் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். பஹிர் மனைவி தான் இருவரையும் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உடனே இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்.