காதலுக்கு தடையாக இருந்த கணவர் கொலை : இளம் பெண்ணின் திட்டம் அம்பலம்!!

517

தருமபுரியில்..

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை ஆட்களை வைத்து கொலை செய்த மனைவி உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சடலத்தை கைப்பற்றிய பெரும்பாலை காவல் நிலைய போலீசார் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த இளைஞர் இண்டூர் அருகே சோம்பட்டியை சேர்ந்த மணி(வயது 30) என்பதும், டெம்போ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. உயிரிழந்த மணிக்கு அம்சவள்ளி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

இளைஞரின் மரணத்திற்கான காரணம் குறித்து ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் இறந்து போன மணியின் மனைவி, மாமியார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சந்தேகம் எழுந்தது.

பின்னர் கவனத்தை மணியின் மனைவி அம்சவள்ளி மீது திருப்பிய போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அம்சவள்ளி தனது கல்லூரி காதலன் சந்தோஷ்( வயது 27) மூலம், கணவனை பெட்ரோல் ஊற்றி, எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் பெங்களூருவில் பேப்பர் கடை வைத்திருந்த சந்தோஷை கைது செய்து பெரும்பாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த அதே ஊரை சேர்ந்த லோகேஷ் (வயது 23) மணியின் மனைவி அம்சவள்ளி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அம்சவள்ளிக்கு அதிக ஆண் நண்பர்கள் இருந்து வந்ததுள்ளனர். இதனை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


அதனால் கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டிய அம்சவள்ளி சம்பவத்தன்று காலை கணவருக்கு பணம் கொடுத்து மதுகுடிக்க அனுப்பியுள்ளார். மணி தனது மனைவி கொடுத்த பணத்தில் தொடர்ந்து மாலை வரை குடித்துள்ளார். பிறகு மாலை உனது நண்பர் சந்தோஷ் அழைக்கிறார் சென்று வா என்று என மனைவி அனுப்பி வைத்துள்ளார்.

சந்தோஷ் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று சென்றதால் மணியுடன் நண்பராகியுள்ளார். சந்தோஷை சந்திக்க சென்று அங்கும் அவருடன் சேர்ந்து மணி மது அருந்தியுள்ளார்.

போதை தலைக்கேறிய மணி அசைவற்று கிடந்தபோது சந்தோஷ் மற்றும் லோகேஷ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பெரும்பாலை அருகே உள்ள நரசிபுரம் சுடுகாட்டிற்கு சுமார் 25 கிலோமீட்டர் தூரம் கூட்டிச் சென்று கை, கால்களை கட்டுப்போது மார்பு பகுதியில் எட்டி உதைத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க கொலை செய்த மணியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பெங்களூருவிற்கு தப்பி சென்றுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவரை இளம்பெண் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் தருமபுரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.