மகளின் காதலன் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி வெளுத்துவாங்கிய தாய், மகன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

221

புனே ..

மகளின் காதலனின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவி கொடூரமாக தாக்குதல் நடத்திய தாய் அவரது இரண்டு மகன்களை புனே போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் சின்ச்வாட் பகுதியில் உள்ள போஷ் சொசைட்டி அருகே செப்டம்பர் 13 அன்று நடந்தது.

அந்த பெண்ணின் மகளுடன் கடந்த 6 ஆண்டுகளாக பழகிவந்த விஷால் கஸ்பே, செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் காதலியை சந்திக்க வந்துள்ளார். ஆனால் அவர் தனது காதலியை சந்திப்பதற்கு முன்பு, அவரது தாயும் இரண்டு மைனர் சகோதரர்களும் வீட்டை விட்டு வெளியே வந்து அவரை விசாரிக்கத் தொடங்கினர், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

அந்த பெண் அந்த இளைஞனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மகன்கள் இருவரும் அந்த இளைஞரை கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

அருகில் இருந்த சிலர் அந்த இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காதலன் தற்போது தலையில் பல காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.