வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டிய ஆசிரியர்.. தக்க பாடம் புகட்டிய மக்கள்!!

715

ஜார்க்கண்ட்டில்..

ஜார்க்கண்ட்டில் வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை அடித்துப் செருப்பு மாலை அணிவித்து பெற்றோர்கள் வீதி வீதியா அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், பதம்ஜம்டா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆசியராக இருப்பவர் துகாராம். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டியுள்ளார்.

மேலும் மாணவிகளைத் தகாத முறையில் தொட்டுள்ளார். இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் போலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஆசிரியரின் கழுத்தில் செறுப்பு மாலையை அணிவித்து வீதி வீதியா அழைத்துச் சென்றுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்க வந்த போலிஸார் பொதுமக்களிடம் இருந்து ஆசிரியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதாக போலிஸார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.