கணவன்-மனைவி கழுத்தறுத்து கொலை… நெஞ்சு பதைபதைக்கும் கொடூரம்!!

353

சென்னையில்..

சென்னை, சிட்லபாக்கம் பகுதியில், கணவன்-மனைவி இருவரும் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, குரோம்பேட்டை, ஜமீன் ராயபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் அந்த பகுதியில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா(40). இவர் கணவருக்கு உதவியாக இருந்தார்.

இவர்கள் இருவரும், ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் முதல் குறுக்கு தெருவில், சமீபத்தில் குடியேறினர். ஆறுமுகத்தின் பெரிய மகள், அதே பகுதியில் ,கணவருடன் வசித்து வருகிறார். மகள் வீட்டிற்கு, ஆறுமுகம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆறுமுகம், பெரிய மகள் வீட்டிற்கு வரவில்லை. தினமும் வீட்டிற்கு வரும் தந்தை, ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை என, அவரின் மகள், ஆறுமுகம், மஞ்சுளா ஆகியோருக்கு போன் செய்துள்ளார். ஆனால், இருவரது செலோபோன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதனால் சந்தேகம் அடைந்த மகள், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் தனது தாய் தந்தை வீட்டிற்கு சென்றார். வீட்டினுள் தாய் மஞ்சுளா, தந்தை ஆறுமுகம் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதை கண்டு மகள் கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இது குறித்து சிட்லப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர். இருவரின் உடல்களை கைப்பற்றி , பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை பணத்துக்காக இந்த இரட்டை கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் சிட்லப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.