நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த மகன்.. அதிர்ச்சியில் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

364

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிராவில் நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய மகன் உயிரிழந்ததைப் பார்த்து அவரது தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், விரார் என்ற பகுதியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணீஷ் நராப் சோனிக்ரா என்ற இளைஞர் நடனமாடினார்.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நராப்ஜி மகனைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட நராப்ஜியும் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் உயிரிழந்ததை கேட்டு தந்தையும் மரணமடைந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.