ஓமந்தை மத்திய கல்லூரியில்..
அப்துல்கலாம் பசுமை உலகத்திட்டத்தின் ஊடாக, டாக்டர் A. P. J அப்துல்கலாம் அவர்களின் 91 வது பிறந்ததினத்தை முன்னிட்டு சர்வதேச ஐக்கிய கலாம்(IUKF) அறக்கட்டளையின் மரநடுகை விழாவானது திரு.M.சபேசன் (IUKF வடமாகாண பணிப்பாளர்) தலைமையில் கடந்த 14.10.2022 அன்று ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. மயில்வாகனம் ஜெயரூபன் (பிரதி கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. செல்லத்துரை பவேந்திரன் (அதிபர் ஓமந்தை மத்திய கல்லூரி) அவர்களும் மற்றும் IUKF துறைசார் விருந்தினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேற்படி நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து சர்வதேச ஐக்கிய கலாம்(IUKF) அறக்கட்டளையின் உறுப்பினர்களால் நாட்டி வைக்கப்பட்டன.