நடுவீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசுக் கார்!!

422

சொகுசுக் கார்..

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் திடீரென சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (10.11.2022) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீப்பற்றிய காரில் சாரதி மாத்திரம் பயணித்திருந்ததாகவும், தீப்பற்றியதில் கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, தீப்பரவலை பொது மக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.