மன்னாரில் கட்டுப்பாட்டையிழந்து பட்டாரக வாகனம் விபத்து – : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

906

விபத்து..

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் இசைமாலைதாழ்வு பகுதியில் இன்று (13.11.2022) காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த பட்டா ரக வாகனம் வீதியின் அருகில் இருந்த மரத்தில் மோதிண்டு விபத்துக்குள்ளானதுடன் வாகனத்தின் சாரதி வாகனத்தினுள் நசியுண்டு ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த முருங்கன் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலத்தினை மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.