தென்னிலங்கையில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும்,மகளும் பரிதாபமாக பலி!!

825

விபத்தில்..

கம்பஹா – மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்த காரொன்று மோதியதில் தந்தை மற்றும் மகள் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் 54 வயதுடைய தந்தையும்,14 வயதுடைய மகளுமே உயிரிழந்துள்ளனர். இதன்போது விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்ல முயன்ற காரின் சாரதி, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பு நிறைவடைந்ததன் பின்னர் மகளை தந்தை வீட்டிற்கு அழைத்துச்சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.