இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இந்திய நடிகையின் மோசடிகள் அம்பலம்!!

1060

ஜக்குலின் பெர்னாண்டஸ்..

இந்தியாவில் பிரபல நடிகையான ஜக்குலின் பெர்னாண்டஸும் இலங்கையில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

200 கோடி இந்திய ரூபாயை கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஜாக்குலினிடம் விசாரித்தபோது, ​​வெலிகம பகுதியில் சுகேஷ் வீடு ஒன்றை கொள்வனவு செய்திருந்தாலும் தான் அங்கு சென்றதில்லை என்று கூறியுள்ளார். அதற்கான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டை தவிர்க்கும் வகையில் ஜாக்குலின், சுகேஷின் குற்ற வரலாறு குறித்து தனக்கு தெரியாது என பொய்யான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜெக்குலினின் சகோதரிக்கு 1.26 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள சகோதரருக்கு 15 லட்சம் இந்திய ரூபாயும் 5.17 கோடி இந்திய ரூபாயும் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆதாரங்களை சேதப்படுத்தியதாகக் கருதப்படும் தனது தொலைபேசித் தகவல்களை ஜாக்குலின் நீக்கிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.