வவுனியாவில் சீரற்ற காலநிலையினால் தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய கட்டடத்தின் மேல் வீழ்ந்த மரம்!! 

618

சீரற்ற காலநிலையினால்..

வவுனியா கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையுடன் கூடிய வானிலை நிலவி வருவதுடன் காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகின்றது.

மாவட்டத்தில் நேற்று (21.12.2022) மாலை காற்றுடன் கூடிய மழை காரணமாக தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வீதியோரமாக நின்ற மரமொன்று சரிந்து பாடசாலை கட்டிடம் மேல் வீழ்ந்ததில் கட்டிடத்தின் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மரத்தினை அகற்றும் பணியினை பொதுமக்களின் உதவியுடன் அதிகாரிகள் முன்னெடுத்தனர்.