இலங்கையில் உள்ள தாயை தேடும் பிரான்ஸ் யுவதி : விடுத்த உருக்கமான கோரிக்கை!!

886

இலங்கையில்..

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவதி ஒருவர் இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்துகொடுக்கப்பட்ட இலங்கையில் பிறந்த ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ரோசி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்னர் ரோசி இரண்டு முறை இலங்கைக்கு வந்து தனது தாயை கண்டுபிடிக்க முயற்சித்த போதிலும் அது கைகூடவில்லை.

ரோசி கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் பிறந்துள்ளார். எனினும் இரண்டு தாய்மாரின் பெயர்கள் அப்போதைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர் தாயை கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்.

கொழும்பு பீட்டர் ஹேவகே பிரியந்தி ரோணுகா மற்றும் வந்துரம்ப திலகாவதி ஆகியோரின் பெயர்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தனது தாயார் தொடர்பில் தகவல்கள் அறிந்தவர்கள் 0772114794 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ரோசி கோரிக்கை விடுத்துள்ளார்.