வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!!

574

சுனாமி நினைவுதினம்..

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களிற்கான 18ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று (26.12.2022) இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேரூரைகளும் இடம்பெற்றது.

குறித்த நினைவுத் தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலாவதாக அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியாகவும் விளங்குகின்றது.

நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே.ரத்நாயக்கே, மதகுருமார்கள், ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், நகரசபை, தெற்கு தமிழ் பிரதேசசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன்,

நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர்,
பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.