விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை..
சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (26.12.2022) காலை 8.15 மணிக்கு இடம்பெற்றது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்ம சாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன் நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கேரத்நாயக்க,
மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.