வவுனியாவில் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

1119

இளைஞன் கைது..

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (27.12.2022) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிசார் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஐஸ் போதைப் பொருளுடன் சென்ற ஒருவர் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரிடம் இருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 20 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மோட்டர் சைக்கிளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.