வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து போராட்டம்!!

499

போராட்டம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (09.01.2023) காலை 10.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரி, வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் பேரணியாக வைத்தியசாலை நுழைவாயிலிருந்து சென்று மணிக்கூட்டு கோபுர சந்தியூடாக சென்று மீண்டும் வைத்தியசாலை ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்திருந்தனர்.