வவுனியாவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!!

518


புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி..



எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களம் இறங்கவுள்ள புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி இன்று (13.01.2023) அதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியது.



கட்சியின் வன்னி மாவட்டங்களிற்கான செயலாளர் நி.பிரதீபனின் தலைமையில் சென்ற வேட்பாளர்கள் மற்றும், கட்சியின் உறுப்பினர்களால் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.




புதிய ஜனநாயாக மாக்சிச லெனினிச கட்சியானது வவுனியா மாநகரசபை மற்றும் தெற்கு தமிழ் பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களிலும் இம்முறை தமது வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளது.