வவுனியாவில் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் பணிகள் ஆரம்பம் : பாதுகாப்பு தீவிரம்!!

352

பாதுகாப்பு தீவிரம்..

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான மாவட்ட செயலகங்களுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்ட செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுப்பணம் செலுத்தாத கட்சிகளுக்கு நாளை 20 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வேட்புமனு தாக்கல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைய இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.