வவுனியாவில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக இதுவரை 78 கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுள்ளது!!

338
Person voting

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியாவில் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்ளடங்களாக நேற்று( 19.01) மாலை வரை 78 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை அடையும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் உள்ளடங்களாக 78 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை என 5 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் சில உள்ளுராட்சி மன்றங்களில் மட்டும் போட்டியிடுவதற்கும் சில கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் முழுமையாக 78 கட்டுப்பணங்கள் கிடைக்கப்ப பெற்றுள்ளதுடன், ஒரு கட்சி வேட்புமனுத் தாக்கலையும் இதுவரை செய்துள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா மாநகர சபையில் போட்டியிடுவதற்கே அதிகளவிலான கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.