வத்திக்கான் வங்கி விசாரணையில் மூத்த ஆயர் ஒருவர் கைது..!

452

வத்திக்கானின் நிதி நிர்வாகத்துறையில் பணிபுரிந்த மூத்த ஆயர் ஒருவர் ( பிஷப்) இத்தாலியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வேலைகளில் ஈடுபட்டமை, பணத்தை சுருட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

மொன்சிக்னோர் நுன்சியோ ஸ்காரானோ என்ற இந்த ஆயர் வத்திக்கான் வங்கி ஊடாக தொடர்ச்சியாக சந்தேகத்துக்கு இடமான பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாதாக தெரியவருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றியே இத்தாலிய காவல்துறையினர் அவரிடம் விசாரித்துவருகின்றனர். இந்த விவகாரத்துடன் சம்மந்தப்பட்ட இத்தாலிய உளவுத்துறை அதிகாரி ஒருவரும் நிதித் தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.

வத்திக்கான் வங்கி தொடர்பில் விசாரணை ஆணையம் ஒன்றை பாப்பரசர் பிரான்சிஸ் அமைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்களில் இந்த கைதுகள் நடந்துள்ளன.

வத்திக்கான் வங்கி தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.