விபத்து…
வவுனியா செட்டிகுளம் தட்டாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று (25.01.2023) மாலை இடம்பெற்ற இவ்விபத்துசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
செட்டிகுளம் பகுதியில் இருந்து பூவரசங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் தட்டாங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த கன்ரர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
சம்பவத்தில் ரங்கெத்கம பகுதியைசேர்ந்த நந்தன கிருசாந்த (வயது 41) என்ற நபரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசராணைகளை செட்டிகுளம் பொலிசார் முன்னெடுத்துவருகின்றனர்.