வவுனியாவில் சுதந்திர தினத்திற்கு ஆதரவாக வாகனப் பேரணி!!

822

வாகனப் பேரணி..

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியம் அமைப்பினரினால் வாகனப் பேரணியேன்று இன்று (04.02.2023) காலை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவதுடன்,

கறுப்புக்கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே சுதந்திர தினத்திற்கு ஆதரவாக வாகனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் வாகனப்பேரணி வவுனியா நகரை வலம் வந்திருந்தமையுடன் மேளம் , இசை என்பனவற்றுடன் சென்றிருந்தது.