கணவர் இழப்பால் கதறித் துடித்த மனைவி… அழுதுகொண்டே இருக்கும் போதே நேர்ந்த துயரம்!!

570

விழுப்புரத்தில்..

பல காலமாக இணைந்து வாழ்ந்த கணவர் உயிரிழந்த சூழலில், அடுத்து மனைவிக்கும் நேர்ந்த துயரம், குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 71).

இவருக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் சிகிச்சை பலனின்றி குப்புசாமி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, குப்புசாமி உடலை அவரது மகன்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கண்டாச்சிபுரத்திற்கும் கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் குப்புசாமியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் அங்கே தீவிரமாக நடந்து கொண்டிருக்க, குப்புசாமி மரணம் அங்கிருந்தவர்களை நிலைகுலையவும் வைத்திருந்தது.

மேலும் இத்தனை ஆண்டுகள் தன்னுடன் கணவனாக இருந்து பல்வேறு தருணங்களில் உடன் இருந்து பார்த்துக் கொண்ட குப்புசாமியின் இழப்பு அவரது மனைவி சரஸ்வதியை கடுமையாக பாதிக்கவும் செய்திருந்தது.

இந்த நிலையில் அங்கே கூடி இருந்த அனைவருக்கும் மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்துள்ளது. குப்புசாமி உடல் அருகே இருந்த அழுது படி இருந்த அவரது மனைவி சரஸ்வதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்த மனைவியும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் இன்னும் அதிக சோகத்தை ஏற்படுத்தியதுடன் இறப்பில் கூட இணை பிரியாத தம்பதி என குப்புசாமி மற்றும் சரஸ்வதி ஆகியோரை உருக்கத்துடனும் குறிப்பிட்டு வருகின்றனர்.