உருகி உருகி காதலித்த நபர் மரணம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

374

கேரளாவில்..

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் நல்லபதி பிரணவ். 6 வருடங்களுக்கு நண்பருடன் செல்லும்போது நடந்த, எதிர்பாராத விபத்தில் எழுந்து நடமாட முடியாத சூழல் உண்டாக, வாழ்க்கை புரட்டிப்போட்டது.

வீல்சேரிலேயே எப்போதும் பிரணவ் இருக்கவேண்டி இருந்தது. ஆனாலும் மனதளவில் எப்போதும் உற்சாகமாக இருந்த பிரணவ் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உறுதுணையுடன் இயங்கி வர, வலைதளத்தின் மூலம் அவரை பார்த்த சஹானாவுக்கு காதல் வந்தது.

அப்போது தனது காதலை சஹானா, வெளிப்படுத்த ஆனால், பிரணவ் அதை மறுத்தார். எனினும் சஹானா தனது காதலில் உறுதியாக இருந்தார். பிரணவோ தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு, சஹானாவின் காதலை பலவழியில் மறுத்து பார்த்தார்.

தனக்கு வேறு ஒரு காதல் இருக்கிறது என்றெல்லாம் கூட சொல்லி, சஹானாவை மடைமாற்ற பார்த்தார். ஆனால் சஹானா தன் காதலில் உறுதியாக நின்றார்.

ஒரு நாள் பிரணவை தேடி திரிசூருக்கு நேரிலேயே சஹானா வந்துவிட அப்போதும் பிரணவ் சஹானாவை திருப்பி அனுப்ப முயன்று அவரது அன்பால் தோற்றுப் போய்விட, அடுத்த நாளே, கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்தனர்.

சாதி, மதம் தாண்டி, வீட்டார் கருத்துக்களை மீறி, தோழிகள் அட்வைஸையும் பொருட்படுத்தாத சஹானா பிரணவை கரம்பிடித்து காதலுக்கு மனம் தான் முக்கியம் என நிரூபித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென பிரணவ் ரத்த வாந்தி எடுத்ததாகவும் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வந்ததுடன்,

அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரணவ் உயிரிழந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பலரும் சஹானாவுக்கு ஆறுதல் கூறி வருவதுடன் பிரணவ் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.