ஊரில் சாதி வெறி கொடுமை.. காதலுக்காக போலீசில் தஞ்சம் அடைந்த பெண்!!

315

சேலத்தில்..

காதலன் கடத்தியதாக காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததாக பெற்றோர்கள் மீது கல்லூரி மாணவி வீடியோ வாயிலாக பரபரப்பு குற்றசாட்டு வைத்துள்ளார். கலப்பு திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் பொய் சொல்லி அழைத்து சென்று வேறொரு நபருடன் பதிவு திருமணம் செய்த வைத்ததாக இளம்பெண் பரபரப்பு

சேலம் தாதகாப்பட்டி வேலுநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கனிஷ்கா (22). இவர் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற போது மாயமானார்.

இதுபற்றி மணிகண்டன் அன்னதானப்பட்டி போலீசார் புகார் அளித்தார். அதில் தனக்கும் கனிஷ்காவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடந்தது. ஆனால் கனிஷ்கா தனது முன்னாள் காதலனுடன் தொடர்ந்து பேசி வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கனிஷ்காவை காதலனான சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் கடத் திச்சென்றுவிட்டனர் என அதில் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரகலா விசாரணை நடத்தி அஜித்குமார் மற்றும் அவரின் பெற்றோர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அஜித்குமாரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் தான் கனிஷ்காவை கடத்தவில்லை என்றும், அவருடன் தனக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கனிஷ்காவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் கனிஷ்கா பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நான் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்ததாகவும். இந்த சம்பவம் கடந்த 2 மாதத்திற்கு முன் எனது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்த பெற்றோர், தாத்தா இறந்துவிட்டதாக பொய் சொல்லி அங்கிருந்து அழைத்துச்சென்று உறவினரான மணிகண்டன் என்பவருடன் பதிவு திருமணம் செய்து வைத்து விட்டனர்.

அப்போது தான் காதலித்த வாலிபரை கொன்றுவிடுவதாக என்னை மிரட்டி கையெழுத்து போடவைத்தனர். தற்போது நான் சென்னையில் உள்ள விடுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளேன். மேலும் இதுபற்றி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன்.

போலீசாரும் விசாரித்தனர். அதில் எனது பெற்றோரை வரவழைத்து அவர்களும் இனிமேல் தொந்தரவு செய்யமாட்டோம் என எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் சேலம் சென்றதும், எனது காதலன் மற்றும் அவரின் பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார்கள்.

எனக்கும் எனது காதலன் குடும்பத்தினருக்கும் ஏதாவது நிகழ்ந்தால் எனது பெற்றோர் மற்றும் மணிகண்டன் தான் காரணம் என கனிஷ்கா தெரிவித்துள்ளார்.

மேலும் எனது பெற்றோர் சாதி வெறி பிடித்து அலைவதாகவும் தன்னை காதலித்தவர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் எங்களை சேர்ந்து வைக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.